உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Wednesday, 21 March 2012

வடக்கு தெரு தைக்காவில் இன்று மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு வினியோகம்:


     கீழக்கரை நகரில் முதலமைச்சரின் அரசு காப்பீட்டு திட்ட கார்டு தொடர்ந்து நகர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கீழக்கரை வடக்கு தெரு தைக்காவில்  வைத்து கார்ர்டுகள் வழங்கப்பட்டன. இதனை 20வது வார்டு கவுன்சிலர் ஜனாப் A.Hஹாஜா நஜ்முதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  


      கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப் H. ஹாஜா முகைதீன் அவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜனாப் S.A அன்வர் அலி, ஜனாப் M.சாகுல் ஹமீது, ஜனாப் MUV. முகைதீன் இப்ராகீம், திரு. D.ஜெயப்பிரகாஷ், ஜனாபா M.S முகம்மது மஜிதா பீவி ஆகியோர் உதவிகரமாக இருந்து பணியாற்றினார்கள். வடக்கு தெருவை சேர்ந்த பொது நலப்பணிகள் செய்து வரும் ஜனாப் வாஹித் அவர்கள் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.





கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு(குப்பை கொட்டும் இடம்) கட்டும் பணி தீவிரம்:


துணைத்தலைவர்
 H.ஹாஜா முகைதீன்
21 வது வார்டு கவுன்சிலர்
D.ஜெயப்பிரகாஷ்











கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கு ரூ. 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் இப்பணி முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. ரூ. 53 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கீழக்கரை நகர் முழுவதும் குப்பைகள் தினசரி அகற்றப்ப்ட்டு சுகாதாரம் முழுமையாக அமுல்படுத்தப்படும்.



Saturday, 17 March 2012

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட வினியோகம்:

கீழக்கரையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட வினியோகம் துணைத் தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது:

 கீழக்கரையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட கார்டு யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் வினியோகம் செய்யப்பட்டது. R.சுரேஷ் குமார் மவட்ட ஒருங்கிணைப்பாளர், S.நாக குமார் தகவல் தொடர்பு அதிகாரி மற்றும் D.செந்தில் நாதன் மாவட்ட புகைபடம் எடுக்கும் அதிகாரி ஆகியோர் இப்பணியை மேற்கொண்டார்கள்.


கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் ஜனாப் H.ஹாஜா முகைதீன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நகராட்சி கவுன்சிலர்கள் S.Aஅனவர் அலி, MUV.முகைதீன் இப்ராகீம் மற்றும் S.அஜ்மல் கான் ஆகியோர் உடன் இருந்தனர். இன்று கீழக்கரை நகர் மக்களுக்கு ஆயிரம் கார்டுகள் வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து கார்டுகள் வழ்ங்கும் பணி நடைபெறும்.

Wednesday, 14 March 2012

கீழை நகர் வளர்ச்சி பணிகளில் கீழக்கரை நகராட்சி

துணைத்தலைவர்

  1. கீழக்கரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் பைப்லைன் ரூ.1 கோடி செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது
  2. புதிய வாருகால் அமைக்கும் பணிக்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
  3. உரக்கிடங்கு (குப்பை கொட்டும் இடம்) சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் தளம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி செலவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பணிகள் நகர்மன்ற ஒப்புதலுக்கு பின் 1.04.2012 முதல்  தொடங்கப்பட உள்ளது.




இந்த வளர்ச்சி பணிகளை தொடர்ந்து கீழக்கரை நகருக்கு புதிய 10 லட்சம் லிட்டர் கொள்ளலவு உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அந்த பணியும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



Tuesday, 13 March 2012

கவனிப்பாரா கீழக்கரை நகராட்சி கமிஷனர்?

கீழக்கரை AMS பெட்ரோல் பங்க் கடற்கரை ரோட்டின் அவல நிலை இதோ:-
                                       

                                    


இது சம்மந்தமாக 8 வது வார்டு கவுன்சிலர் பாவா என்ற செய்யது கருணை கூறுகையில்:- 

கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபூர் ரஹ்மான் 10 நட்களுக்கு ஒருமுறை  தான் கீழக்கரை வருகின்றார் அதுவும் ஒரு சில மணிநேரம் மட்டும் அலுவலகத்தில் இருக்கின்றார். நகரின் சுகாதாரத்தை பார்த்துக்கொள்ளும் ஆய்வாளர் இடம் காலியாக உள்ளது. ஆகவே, கீழக்கரை நகராட்சிக்கு நிரந்தரமான கமிஷனர், சுகாதார ஆய்வாளர் விரைவில் நியமிக்க பட வேண்டும். பொது சுகாதார துப்புரவு பணியாளர்கள் பற்றாகுறை விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Monday, 12 March 2012





கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கில்(குப்பை கொட்டும் இடம்) சுற்று சுவர் அமைக்கப்படுவதை கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்கள் 5 வது வார்டு கவுன்சிலர்  M.சாகுல் ஹமீது அவர்கள் 7 வது வார்டு கவுன்சிலர் S.A அன்வர் அலி அவர்கள்  8 வது வார்டு கவுன்சிலர் K.செய்யது கருணை  10 வது வார்டு கவுன்சிலர் S.அஜ்மல் கான் அவர்கள் 20 வது கவுன்சிலர் A.H ஹாஜா நஜ்முதீன் அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர் இவர்களுடன் சமூக ஆர்வலர்கள் M.செய்யது ரியாஸ்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர் சுலைமான் அவர்கள் kilakaraivicechairman இணையதள ஆலோசகர் KVC.வேலுச்சாமி அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.