உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Sunday 13 May 2012

கீழக்கரை காவல் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:

கீழக்கரை காவல் நிலையத்தில்  இன்று (12.05.2012) மாலை 4.30 மணிக்கு காவல்துறை துணைத்தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள் தலைமையிலும், இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்கானிப்பாளர் அவர்கள் முன்னிலையிலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் அவர்கள்  காவல்துறை துணைத்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்தார். கீழக்கரை நகரில் போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் கீழக்கரை பேரூந்து நிலையத்தில் காவல்துறை OUT-POST அமைக்க வலியுறுத்தி மனு ஒன்றை கீழக்கரை மக்கள் சார்பாக கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H.ஹாஜா முகைதீன் அவர்கள் கொடுத்தார்கள் 



கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான முக்கிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மனுக்களை DIG அவர்களிடம் நேரிடையாக வழங்கினார்கள்.

No comments:

Post a Comment