உண்மை! உழைப்பு!! உயர்வு!!!

Sunday 22 April 2012

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

 தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கிகரிக்கப்பட்ட பயோனியர் மருத்துவமனை (இராமநாதபுரம்) நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 22.04.2012 காலை 10 மணியளவில் கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் ப்ள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பயோனியர் மருத்துவமனை டாக்டர் திருமதி R.சித்திர ஜோதி MBBS அவர்கள், மருத்துவமனை செயலாளர்கள் S. ஜெயா, R. கற்பக வாணி,  S. ஜனனி , N. உமாதேவி, K. ஹேமபிரியா பயோனீர் மேனேஜர் M.C வைரவ தேவி தகவல் தொடர்பு அதிகாரிகள் S.A முகம்மது மதார் சாகிபு, R.S. நாக குமார் ஆகிய அனைவரும் சிறப்பான மருத்துவ பரிசோதனையை நகர் மக்களுக்கு வழங்கினார்கள்.                                              





தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. R.சுரேஷ் குமார் இலவச மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினார்.
இலவச மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் H. ஹாஜா முகைதீன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நகர்மன்ற க்வுன்சிலர்கள் SA. அன்வர் அலி MC, சாகுல் ஹமீது MC, K. செய்யது கருணை MC, மற்றும் MUV முகைதீன் இப்ராகிம் MC ஆகியோர் அவர்களது சிறப்பான சேவையை செய்தனர்.

No comments:

Post a Comment